சென்னை: பொதுக் கூட்டங்கள், அரசியல் கூட்டங்களை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி வழிகாட்டு நெறிமுறைகள் வகுத்து அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அனுமதி பெறுவது, என்னென்ன ஏற்பாடுகள் செய்ய வேண்டும் உள்ளிட்டவை குறித்து விரிவான விபரங்கள் இடம்பெற்றுள்ளன.
* புதிய நெறிமுறைகளின்படி வரையறுக்கப்பட்ட இடத்தில் நிகழ்ச்சி நடத்த 10 நாள்களுக்கு முன்பு விண்ணப்பிக்க வேண்டும்
* அரசு பரிந்துரைத்ததற்கு மாற்றாக வேறு இடத்தில் நிகழ்ச்சி நடத்த 10 முதல் 30 நாட்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும்